பல்டி அடித்த பிரித்தானிய அரசாங்கம்! திட்டத்தை கைவிட்டதாக அறிவித்த சுகாதார அமைச்சர்
பிரித்தானியாவில் உள்ள மக்கள் இரவு விடுதிகள் போன்ற நெரிசலான நிகழ்வுகளில் நுழைய தடுப்பூசி பாஸ்போர்ட்களைக் காட்டும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு முழுமையாக இரண்டு தடுப்பூசி டோஸ்களும் செலுத்தபட்டுள்ளது.
தொடர்ந்து 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குளிர்கால கோவிட் அலையை தவிர்ப்பதற்காக வரும் வாரங்களில் தடுப்பூசி கடவுச்சீட்டு விதிமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறைவிக்கப்பட்டிருந்தது.
இரவு விடுதிகள், திரை அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்று நெரிசல் நிறைந்த பொது இடங்களில் நுழைய 16 வயதுக்கு மேற்பட்ட அணைத்தது பெரியவரும் தடுப்பூசி கடவுச்சீட்டை காண்பிப்பது கட்டாயம் என புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடுப்பூசி பாஸ்போர்ட்களைக் காட்டும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்த யூ-டர்னை அறிவித்த சஜித் ஜாவித், தற்போதைய தடுப்பூசி விநியோகத்தை காரணம் காட்டி, தற்போதைய வைரஸ் சூழ்நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை அவசியமாகக் கருதவில்லை என்று கூறினார்.