வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு

London Iraq Kuwait
By Arbin Jul 01, 2024 07:04 AM GMT
Report

குவைத்தில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணயக் கைதிகளாக

குவைத்தில் 1990ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது 94 பேர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரகவும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராகவும் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு | Uk Government Sued Over Kuwait Hostage Crisis

367 பயணிகளுடன் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்ற இந்த விமானமானது ஆகஸ்டு 2ம் திகதி குவைத்தில் தரையிறங்கவும், அதிலிருந்து 149 பேர்களை வெளியேற்றி, பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஈராக்கின் அப்போதைய ஜனாதிபதி சதாம் உசேன் குவைத்தின் மீது படையெடுத்த சில மணி நேரங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த 149 பேர்கள் மேற்கத்திய நாடுகளின் தாக்குதலுக்கு எதிராக ஈராக்கிய ராணுவத்தால் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பிரித்தானிய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரகவும் லண்டனில் வழக்குத் தொடர்ந்துள்ள 94 பேர்கள், தாங்கள் அனுபவித்த துன்பங்களை பட்டியலிட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு | Uk Government Sued Over Kuwait Hostage Crisis

படையெடுப்பு குறித்து லண்டனுக்கு தகவல்

உடல், உள ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அதன் பாதிப்புகள் தற்போதும் தாங்கள் அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரித்தானிய அரசாங்கமும் அந்த விமான நிறுவனமும் குவைத்தின் மீது ஈராக் படையெடுத்துள்ளதை அறிந்திருந்தும் தரையிறங்க அனுமதித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, தங்களை குடிமக்களாக நடத்தப்படாமல் வெறும் வணிக, அரசியல் ஆதாயத்திற்காக அடகு வைக்கும் பொருளாக நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, 2021ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் முன்னரே குவைத்துக்கான பிரித்தானிய தூதர் ஈராக்கின் படையெடுப்பு குறித்து லண்டனுக்கு தகவல் பகிர்ந்துள்ளதாகவும்,

வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு | Uk Government Sued Over Kuwait Hostage Crisis

ஆனால் விமானிக்கு அந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன், அந்த விமானத்தை பயன்படுத்தி ஈராக் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பிரித்தானியா முயன்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அதை பிரித்தானியா ஒப்புக்கொள்ள மறுத்தது. அத்துடன் தற்போதைய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரித்தானிய அரசாங்கம் கருத்துச் சொல்ல மறுத்துள்ளது. இதனிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் மீது வைக்கபப்ட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மொத்தமாக மறுத்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US