குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸை புகுத்தும் ஆக்ஸ்போர்டு! சவாலான ஆய்வுக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல்
பிரித்தானிய அரசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய சவாலான ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரணமாக குணமானவர்களுக்கு, மீண்டும் அதே வைரஸை உடலில் செலுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறியும் புதிய ஆயவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அரசு அங்கீகாரத்துடன் தொடங்கவுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால், அவரது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் எதிர்வினைகள் மற்றும் மாற்றத்தை கணடறிய உதவும் என நம்பப்படுகிறது.
இந்த ஆய்வு வைரஸைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதையும், புதிய சோதனைகள் மூலம் மிகவும் துல்லியமான தகவல்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக ஏற்கெனெவே தொற்றிலிருந்து குணமாகி ஆரோக்கியமாக இருக்கும் 18 முதல் 30 வயதான 67 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சோதனையில் பங்கேற்கும் அவர்களுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கப்படும் மற்றும் ஒரு மருத்துவமனையில் 17 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் அல்லது மீண்டும் பூரணமாக குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வு 12 மாதங்களுக்கு இரன்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் ஆக்ஸ்போர்டு அறிவித்துள்ளது.