உலகின் 12வது ஆபத்தான நாட்டிற்கு ஹரி, மேகன் பயணம்! தவிர்க்க வேண்டும்..பிரித்தானிய அரசு தரப்பு
அறிவுரை அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தையும் ஹரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நைஜீரியா சுற்றுப்பயணம்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், பிரித்தானியாவில் தனது சொந்த பாதுகாப்பு கேள்விக்குட்படுத்திய பிறகு, ஹரியின் இந்த பயணம் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், உலகின் 12வது மிகவும் ஆபத்தான நாடான நைஜீரியாவிற்கு ஹரி, மேகன் பயணம் செய்துள்ளதாக பிரித்தானிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டும்
அத்துடன் '100,000 பேரில் 34 பேர் கொலை விகிதம் மற்றும் கடத்தல்களுக்கு வாய்ப்புள்ள நாடாக நைஜீரியா இருக்கிறது.
எனவே, அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ஹரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும்.
தலைநகர் அபுஜா ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், பயணத் திட்டத்தில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனாவில் இராணுவத் தளம் ஒரு சூடான சிவப்பு மண்டலமாக பார்க்கப்படுகிறது. மேலும், லண்டனை ஒப்பிடும்போது இது மிகவும் ஆபத்தானது' எனவும் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |