அவசரமாக கூடும் பிரித்தானிய நாடாளுமன்றம்: வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு
பிரித்தானிய நாடாளுமன்றம் பொதுவாக சனிக்கிழமைகளில் கூடுவதில்லை. அதுவும், ஈஸ்டர் விடுமுறையிலிருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று உடனடியாக கூட இருக்கிறார்கள்.
பிரித்தானிய வரலாற்றில், இரண்டாம் உலகப்போரின்போதுதான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியது.
ஆக, இன்றைய நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்பட உள்ளது.
என்ன காரணம்?
இப்படி பிரித்தானிய நாடாளுமன்றம் அவசரமாக கூடக் காரணம், ட்ரம்ப் ஸ்டீல் மீது வரி விதித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் ஸ்டீல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் British Steel நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைக் களைவதற்காகத்தான்.
British Steel என்னும் பிரித்தானிய ஸ்டீல் நிறுவனம், Jingye Group என்னும் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல சவால்களை சந்தித்துவரும் அந்நிறுவனம், 1.2 பில்லியன் பவுண்டுகளை British Steel நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், நாளொன்றிற்கு சுமார் 700,000 பவுண்டுகள் இழப்பை சந்தித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ட்ரம்பின் வரிவிதிப்புகளும் சேர்ந்துகொள்ள, Jingye Group ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆக, மூடப்படும் நிலையிலிருக்கும் British Steel நிறுவனத்தைக் காப்பாற்ற பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக, வேறு வகையில் கூறினால், பிரித்தானியாவின் ஸ்டீல் உற்பத்தியை தொடர்வதற்காக, அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அரசே British Steel நிறுவனத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளவும், அதை தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் இன்று பிரித்தானிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூட இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |