பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பம்! தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

scientist srilankantamil Unitedkingdom asylum claim
By Raju Dec 01, 2021 11:00 AM GMT
Report

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழரும் அவரின் குடும்பத்தாரும் நாடு கடத்தப்படும் சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவர்களை உள்துறை அலுவலகம் பிரித்தானியாவிலேயே இருக்க அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது.

டாக்டர் நடராஜா முகுந்தன் ( Nadarajah Muhunthan) (47) தனது மனைவி சர்மிளா (Sharmila) (42) மற்றும் 13, 9, 5 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் பிரித்தானியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார்.

நடராஜா ஒரு விஞ்ஞானி ஆவார், அவர் சூரிய ஆற்றலை உருவாக்கப் பயன்படும் மெல்லிய ஒளிமின்னழுத்த சாதனங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு மதிப்புமிக்க காமன்வெல்த் ரூதர்ஃபோர்ட் பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அவரை இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்துக்கு வந்து தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து மேம்படுத்த அனுமதித்தது.

அவர் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். நடராஜா மனைவி சர்மிளா முதியோர் இல்லத்தில் முதியோர்களை கவனிக்கும் பணியை செய்து வருகிறார்.

பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பம்! தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் | Uk Homeoffice Changed Decision Srilanka Family

Photograph: Aneta Pruszyńska/The Guardian

தம்பதியரின் மூத்த மகள் கிஹானியா (Gihaniya) பிரித்தானிய பள்ளியில் 100 சதவீத வருகை பதிவேட்டுடன் சிறந்த மாணவியாக திகழ்கிறார். குறிப்பாக அறிவியலில் அவர் செய்த சாதனைகளுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

வருங்காலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதே கிஹானியாவின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் தான் நடராஜா குடும்பத்தாரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானிய உள்துறை முடிவு செய்தது. ஆனால் திடீர் திருப்பமாக உள்துறை அலுவலகம் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு இப்போது நடராஜா மற்றும் அவரது குடும்பத்திற்கும் அகதி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவிற்கு நடராஜா நன்றி தெரிவித்துள்ளார். இப்போது நான் பயமின்றி என் ஆராய்ச்சியைத் தொடர முடியும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2019 நவம்பரில் நடராஜா தனது நோய்வாய்ப்பட்ட தாயாரை காண இலங்கைக்கு சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி நடராஜா பிரித்தானியாவுக்கு திரும்பினார்.

நடராஜாவுக்கான உதவித்தொகை பிப்ரவரி 2020 இல் காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடராஜா குடும்பத்தாரின் வழக்கறிஞர் நாகா கந்தையா கூறுகையில், உள்துறை அலுவலகத்தின் மனமாற்றத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US