பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பம்! தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

scientist srilankantamil Unitedkingdom asylum claim
By Raju Dec 01, 2021 11:00 AM GMT
Report

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழரும் அவரின் குடும்பத்தாரும் நாடு கடத்தப்படும் சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவர்களை உள்துறை அலுவலகம் பிரித்தானியாவிலேயே இருக்க அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது.

டாக்டர் நடராஜா முகுந்தன் ( Nadarajah Muhunthan) (47) தனது மனைவி சர்மிளா (Sharmila) (42) மற்றும் 13, 9, 5 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் பிரித்தானியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார்.

நடராஜா ஒரு விஞ்ஞானி ஆவார், அவர் சூரிய ஆற்றலை உருவாக்கப் பயன்படும் மெல்லிய ஒளிமின்னழுத்த சாதனங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு மதிப்புமிக்க காமன்வெல்த் ரூதர்ஃபோர்ட் பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அவரை இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்துக்கு வந்து தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து மேம்படுத்த அனுமதித்தது.

அவர் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். நடராஜா மனைவி சர்மிளா முதியோர் இல்லத்தில் முதியோர்களை கவனிக்கும் பணியை செய்து வருகிறார்.

பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பம்! தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் | Uk Homeoffice Changed Decision Srilanka Family

Photograph: Aneta Pruszyńska/The Guardian

தம்பதியரின் மூத்த மகள் கிஹானியா (Gihaniya) பிரித்தானிய பள்ளியில் 100 சதவீத வருகை பதிவேட்டுடன் சிறந்த மாணவியாக திகழ்கிறார். குறிப்பாக அறிவியலில் அவர் செய்த சாதனைகளுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

வருங்காலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதே கிஹானியாவின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் தான் நடராஜா குடும்பத்தாரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானிய உள்துறை முடிவு செய்தது. ஆனால் திடீர் திருப்பமாக உள்துறை அலுவலகம் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு இப்போது நடராஜா மற்றும் அவரது குடும்பத்திற்கும் அகதி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவிற்கு நடராஜா நன்றி தெரிவித்துள்ளார். இப்போது நான் பயமின்றி என் ஆராய்ச்சியைத் தொடர முடியும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2019 நவம்பரில் நடராஜா தனது நோய்வாய்ப்பட்ட தாயாரை காண இலங்கைக்கு சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி நடராஜா பிரித்தானியாவுக்கு திரும்பினார்.

நடராஜாவுக்கான உதவித்தொகை பிப்ரவரி 2020 இல் காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடராஜா குடும்பத்தாரின் வழக்கறிஞர் நாகா கந்தையா கூறுகையில், உள்துறை அலுவலகத்தின் மனமாற்றத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US