பிரித்தானியா அதிரடி..! ரஷ்யர்கள், இந்தியர்கள் மீது பொருளாதார தடை: வெளியானது முக்கிய அறிவிப்பு
14 ரஷ்யர்கள், தென் ஆப்பரிக்க தொழிலதிபரான குப்தா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மத்திய அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது பிரித்தானியா பொருளாதார தடை விதித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராட வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தை முதன் முறையாக பயன்படுத்தி பிரித்தானியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய Magnitsky சட்டம், மனித உரிமைகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் நபர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை பிரித்தானியா அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துக்களை முடக்கி, பிரித்தானியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கலாம்.
பொருளாதார தடை விதிக்கப்பட்ட 14 ரஷ்யர்கள் 230 மில்லியன் டொலர் மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரித்தானியா அரசு குறிப்பிட்டள்ளது.
14 பேரில் ரஷ்யாவின் யுனிவர்சல் சேமிப்பு வங்கியின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்ட Dmitry Klyuev-வும் அடங்குவார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஊழலில் சம்பநத்ப்பட்டிருக்கும் இந்தியாவில் பிறந்த சகோதரர்களான அஜய், அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோர் மீதும் பிரித்தானியா பொருளாதார தடை விதித்துள்ளது.
Honduras, Nicaragua மற்றும் Guatemala-வில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதில் மத்திய அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியும் அடங்குவர்.
ஊழல் மோசமான விளைவைக் கொண்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சியைக் குறைக்கிறது, ஏழை நாடுகளின் செல்வத்தை சுரண்டி மக்களை வறுமையில் சிக்க வைக்கிறது.இது ஜனநாயகத்தை விஷமாக்குகிறது என்று பிரித்தானியா வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை வரவேற்பதாகக் கூறினார், உலகளவில் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சிகளை அவர்கள் பலப்படுத்தியதாகக் கூறினார்.