கொரோனாவிடமிருந்து அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது உலகிலேயே இந்த ஒரே ஒரு நாட்டில் மட்டும் தான்!
உலகில் கொரோனா தொற்றிலிருந்து அரசு தங்களை பாதுகாப்பது தொடர்பில் அந்தந்த நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் Global Health Innovation நிறுவனம் தலைமையிலான சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளை கண்காணிக்கவும், பொது சுகாதார யுக்திகளை் பயனுள்ளதா என்பதை கண்டறிவதையும் நோக்கமாக கொண்டு 29 நாடுகளில் 5,40,000 க்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் சுகாதார அமைப்பின் திறன் மீதான பிரித்தானியா மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் தொற்றுநோயை தங்கள் அரசாங்கங்கள் எவ்வாறு கையாண்டன என்பது பற்றிய பிற நாட்டு மக்களின் கருத்துக்கள் காலப்போக்கில் மோசமடைந்துள்ளன .
குறைந்த வருமானம் முதல் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள், அதிக வருமானம் பெறும் நாடுகளை விட மக்களிடையே அதிக நற்மதிப்பு பெற்றுள்ளன.
ஐரோப்பாவில் நெதர்லாந்து அரசு மக்களிடையே மிக உயர்ந்த நற்மதிப்பை கொண்டுள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது.