பிரித்தானியாவில் பொதுமுடக்கமா? நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளர் விளக்கம்
பிரித்தானியாவில் தற்போதைக்கு பொதுமுடக்கம் விதிக்கப்படும் திட்டம் இல்லை என நாட்டின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸான Omicron பரவ தொடங்கிய நிலையிலும், பிரித்தானியா தற்போதைக்கு மற்றொரு பொதுமுடக்கத்தை தவிர்க்கும் என்றே சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
Omicron வைரஸை எதிர்த்துப் போராட, பயணத் தடைகள், சோதனைகள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட கோவிட் கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் கூறினார்.
பிரித்தானியாவில் தற்போது, எசெக்ஸில் உள்ள நாட்டிங்ஹாம் மற்றும் ப்ரென்ட்வுட்டில் மொத்தம் இரண்டு பேருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
மேலும், இந்த கிறிஸ்துமஸ் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்களிடையே Omicron மாறுபாடு குறித்த பீதியை குறைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறினார்.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை உறுதிப்படுத்திய அவர், அரசாங்கம் சீரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.