பிரித்தானியாவில் பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி!
பிரித்தானிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் 211 வாக்குகள் பெற்று தனது பிரதமர் பதவியை தக்கவைத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், பெரும் திருப்பமாக அவரது சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் டோரி எம்.பிக்களே சிலர் இந்த கோரிக்கை முன்வைக்க தொடங்கியதை அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
Boris Johnson supporters bang desks with approval as it's announced he's won confidence vote of Tory MPs by 211 to 148https://t.co/6wr751BDJr pic.twitter.com/L36gozymAE
— Daily Express (@Daily_Express) June 6, 2022
இந்தநிலையில், தனது சொந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களால் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் 211 வாக்குகள் பெற்று தனது பிரதமர் பதவியை தக்கவைத்துள்ளார்.
மொத்தமுள்ள 359 வாக்குகளில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 211 வாக்குகளும் எதிராக 148 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதன்மூலம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் 63 வாக்குகள் வித்தியாசத்தில் தனது பதவியை தக்கவைத்துள்ளார்.
Pic: Sky News
மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவினை 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி அறிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்று நோட்டோ நாடுகளுக்கு...”சத்தான் 2” ஏவுகணை மிரட்டல்: ரஷ்யா அதிரடி!
கடந்த 2019 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து டோரி எம்.பிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 58.8% வாக்குகளும் எதிராக 41.2% வாக்குகளும் பதிவாகியுள்ளது.