ராணியின் சவப்பெட்டியை நெருங்கும் ஆர்வத்தில் லண்டன் இளைஞர் செய்த செயல்; பொது ஒழுங்கை மீறியதாக குற்றசாட்டு
மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்துவந்த 28 வயது லண்டன் இளைஞர் மீது பொது ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
முன்னதாக புதன்கிழமை விக்டோரியா டவர் கார்டனில் வரிசையில் காத்திருந்தபோது, 19 வயது இளைஞன், ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த பலரை பின்னால் இருந்து தள்ளியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
ராணியின் சவப்பெட்டியை நெருங்குவதற்காக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) துக்கம் அனுசரிக்க வந்தவர்களின் வரிசையை உடைத்ததாகக் கூறி, 28 வயது நபர் பொது ஒழுங்கை சீர்குலைத்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனின் டவர் ஹேம்லெட்ஸில் வசிக்கும் முகமது கான் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 19) ஆஜர்படுத்தப்படுவார். லண்டன் பெருநகர காவல்துறையின் படி, கான் பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சம்பவம் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் உள்ளூர் நேரப்படி 10:00 பிஎஸ்டியிகாலை 10 மணியளவில் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
முஹம்மது மீது சனிக்கிழமை (செப்டம்பர் 17) பொது ஒழுங்குச் சட்டத்தின் பிரிவு 4A ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சவப்பெட்டியில் இருக்கும் ராணியை காண வரிசையில் காத்திருக்கும் போது சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் முகமது ஆவார்.
கடந்த புதன்கிழமையன்று (செப்டம்பர் 14) விக்டோரியா டவர் கார்டனில் வரிசையில் காத்திருந்தபோது, 19 வயது இளைஞன் அநாகரீகமாக (exposing himself) நடந்து கொண்டதாகவும், காத்திருந்த பொதுமக்களை பின்னால் இருந்து தள்ளியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அக்டோபர் 14-ஆம் திகதி சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் ஆஜராவார்.
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர். திங்கள்கிழமை (செப்டம்பர் 19) அவரது இறுதிச் சடங்கு வரை, ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்படும்.