கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் பிரித்தானியர் மரணம்... உயிரிழப்புக்கு காரணம் கொரோனா அல்ல: திடுக்கிடும் தகவல்
கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் பிரித்தானியர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு வேல்ஸிலுள்ள, Llandudno என்ற பகுதியைச் சேர்ந்த Connor Reed (26) பிரித்தானிய மாணவர், சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதாக கருதப்படும் வுஹானில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது சில மதுபானங்களை கலந்து அருந்தி தான் கொரோனாவிலிருந்து விடுபட்டுவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த அக்டோபரில் அவர் தன் அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், Connorஇன் மரணத்துக்கு காரணம் கொரோனா அல்ல என்று தெரியவந்துள்ளது.
Connor சட்ட விரோதமாக dark webஇல் போதைப்பொருட்கள் வாங்கியுள்ளார். அத்துடன், இரண்டு வகை போதைப்பொருட்களுடன் கஞ்சாவையும் சேர்த்து அவர் உட்கொண்டு வந்துள்ளார்.
இந்த போதைப்பொருட்கள் இணைந்து உருவாக்கிய நச்சுப்பொருள்தான் அவருக்கு சுவாசக்கோளாறை உருவாக்கி, அதனால்தான் Connor மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.