இதை பொலிஸில் நீ சொல்லக்கூடாது! பிரித்தானியாவில் மோசமான செயலை செய்து சிறுமியின் தாயாரை மிரட்டிய நபருக்கு தண்டனை அறிவிப்பு
பிரித்தானியாவில் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு அவர் தாயாரை மிரட்டிய நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிரேட் மேன்சஸ்டரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ டேவிட் வால்ஸ். இவர் தனக்கு தெரிந்த சிறுமி ஒருவரை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.
இது குறித்து சிறுமி தனது தோழிக்கு மெசேஜ் அனுப்பிய நிலையில் அதை அவர் தாய் கண்டுபிடித்துள்ளார்.
இதையறிந்த ஆண்ட்ரூ சிறுமி தாயாரிடம் , இது குறித்து பொலிஸில் சொல்லக்கூடாது என மிரட்டியிருக்கிறார். ஆனால் சிறுமி தாயார் பொலஸில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் ஆண்ட்ரூவை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்து போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.