தாலிபான்கள் விஷயத்தில் பிரித்தானியா முக்கிய முடிவு! இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? போரிஸ் விளக்கம்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேவைப்பட்டால், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், அங்கு விரைவில் எது போன்ற அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்காது, ஷரியத் சட்டத்தின் படி இருக்கும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதற்கிடையில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரித்தானியா தயாராக இருக்கிறது.
தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் புக மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 1615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரித்தானியா குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கானிஸ்தானியர் என்று தெரிவித்துள்ளார்.