கேரளா சென்ற பிரித்தானியர்: மோசடி வழக்கில் கைது
லண்டனில் வாழ்ந்துவரும் பிரித்தானியக் குடிமகன் ஒருவர் இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்துக்குச் சென்ற நிலையில், பொருளாதராக் குற்றங்கள் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மோசடி வழக்கு
பிரித்தானிய குடிமகனான அஜித் மேனன் (67) என்பவர், செவ்வாய்க்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி, கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரைக் கைது செய்ய ஏற்கனவே நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்த நிலையில், மும்பை பொருளாதராக் குற்றங்கள் பிரிவு பொலிசார் அஜித் மேனனைக் கைது செய்தார்கள்.
பிரபல பிரித்தானிய நிறுவனமான Cox & Kings நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்துவருவதாகக் கூறப்படும் அஜித் மேனனுக்கு எதிராக சுமார் 40 மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பாக, அஜித் மேனனைக் கைது செய்ய பொலிசார் தயாராக இருந்தார்கள். அவர் கொச்சி வருவதை அறிந்த பொலிசார், அங்கு சென்று அவரைக் கைது செய்து மும்பைக்குக் கொண்டு சென்றார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அஜித் மேனன், ஏப்ரல் 15ஆம் திகதிவரை பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |