மூன்று நாட்கள் பிரித்தானியா ஸ்தம்பிக்கும்: மிகப்பெரிய வேலை நிறுத்தம்

By Arbin Jun 07, 2022 06:28 PM GMT
Report

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான ரயில் ஊழியர்கள் இந்த மாதத்தில் மூன்று நாட்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் 1989-கு பின்னர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஊதிய உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தமானது ஜூன் மாதம் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

Network Rail மற்றும் 13 வேறு சேவைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. மேலும், லண்டன் சுரங்க ரயில் சேவைகள் ஜூன் 21ம் திகதி 24 மணி நேரத்திற்கு ஸ்தம்பிக்கும் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

வேலை உறுதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் பயணிகளுக்கு மேலதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

மூன்று நாட்கள் பிரித்தானியா ஸ்தம்பிக்கும்: மிகப்பெரிய வேலை நிறுத்தம் | Uk Nationwide Train Strikes Confirmed Three Days

மூன்று நாள் வேலை நிறுத்தத்தில், முதல் நாளில் 50,000 ஊழியர்கள் பங்கேற்பார்கள் எனவும் எஞ்சிய இரு நாட்களில் தலா 40,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபாடுவார்கள் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வேலை நிறுத்தத்தில், Chiltern Railways, Cross Country Trains, Greater Anglia, LNER, East Midlands Railway, c2c, Great Western Railway, Northern Trains, Southeastern, South Western Railway, Transpennine Express, Avanti West Coast மற்றும் West Midlands ரயில் சேவைகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் எங்களால் முடிந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக நடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச்.

மூன்று நாட்கள் பிரித்தானியா ஸ்தம்பிக்கும்: மிகப்பெரிய வேலை நிறுத்தம் | Uk Nationwide Train Strikes Confirmed Three Days

விலைவாசி உயர்வால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இரயில்வே ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பதையோ அல்லது மற்றொரு வருட ஊதிய முடக்கத்தை சந்திப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மிக் லிஞ்ச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரயில் சேவை நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 500 மில்லியன் பவுண்டுகள் வரையில் இலாபம் பார்க்கிறார்கள். மட்டுமின்றி, கொரோனா காலகட்டத்தில் இரயில்வே சேவைகள் முடங்கி இழப்பு ஏற்பட்டதாக கூறி அதன் தலைவர்கள் பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாகவும் பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பின்னர் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மக்களின் மன நிலை மாறிவிட்டது, அதனால் இரயில் சேவையை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US