ஒமைக்ரான் மாறுபாட்டை எதிர்கொள்ள பிரித்தானியாவில் புதிய சட்டம் அமுல்! வெளியான முழு விபரம்
பிரித்தானியாவில் ஒமைக்ரான் மாறுபாட்டை எதிர்கொள்ள புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று, ஒமைக்ரான் மாறுபாட்டை எதிர்கொள்ள புதிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் வாக்களித்தது.
புதிய சட்டத்தின் படி, இங்கிலாந்து கடைகளில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மேலும், பிரித்தானியாவுக்கு வருகை தரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டால், கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்த அபராதம் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டம் 2022 மார்ச் மாதம் 24ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சில கன்சர்வேடிவ் எம்.பி-க்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிராக சுமார் 33 கன்சர்வேடிவ் கட்சி எம்.பி-க்கள் வாக்களித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சுய-தனிமைப்படுத்தல் விதி மற்றொரு ‘pingdemic’-க்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, 3 வாரங்களில் புதிய சுய-தனிமைப்படுத்தல் விதிகளை மறுபரிசீலனை செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.