பிரித்தானியாவில் Green List எப்போது புதுப்பிக்கப்படும்? புதிதாக எந்த நாடுகள் சேர்க்கப்படும்?
பிரித்தானியாவில் பசுமைப் பட்டியலில் 10 நாடுகள் சேர்க்கப்படலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கோடை விடுமுறைக்கு தனிமைப்படுத்தப்படாமல் விடுமுறை எடுப்பவர்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பசுமை பட்டியலை (Green List) அரசாங்கம் விரைவில் மதிப்பாய்வு செய்ய உள்ளது.
பச்சை பட்டியல் முதலில் ஜூன் 24-ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரப்பூரவ செய்தித் தொடர்பாளர் நேற்று ஜூன் 28-க்குள் புதுப்பிக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
நோய்த்தொற்று விகிதம் குறைவாக இருப்பதால், பின்வரும் நாடுகளை பச்சை நிற பட்டியலில் சேர்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மால்டா - 100,000 பேருக்கு வெறும் 7 பேர் பாதிக்கப்படுகின்றனர்
அமெரிக்கா - 100,000-க்கு 31 பேர் பாதிப்பு
போலந்து மற்றும் மெக்சிகோ - 100,000-க்கு 16 பேர் பாதிப்பு
பின்லாந்து, ஜமைக்கா - 100,000-க்கு 14 பேர் பாதிப்பு
இத்தாலி - 100,000க்கு 27 பேர் பாதிப்பு
ஜெர்மனி - 100,000-க்கு 24 பேர் பாதிப்பு
கடைசியாக ஜூன் 8-ஆம் திகதி மதிப்பாய்வு செய்தபோது, கேனரி அல்லது பலேரிக் தீவுகளைக் கொண்டிருக்கவில்லை. இம்முறை Canary தீவுகள் மற்றும் Balearic தீவுகள் பச்சை பட்டியலில் அறிமுகப்படுத்தப்படலாம்.
மேலும், கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்ற பிரித்தானியர்களை விரைவில் அம்பர் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்க உள்ளதாக என்று டோரி மந்திரி உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது Green List-ல் இருக்கும் நாடுகள்:
இஸ்ரேல்
ஜிப்ரால்டர்
ஐஸ்லாந்து
ஃபாரோ தீவுகள்
புருனே பால்க்லேண்ட் தீவுகள்
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
சிங்கப்பூர்
செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா
தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்