'உயிர் மட்டும் தான் போகல' காதலியை 4 ஆண்டுகளாக நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு கொடுமை செய்த பிரித்தானிய அரசு மருத்துவர்!
பிரித்தானியாவில், மத சடங்குகளை செய்வதற்காக தனது காதலியை 4 ஆண்டுகளாக மயக்க ஊசிகளை கொடுத்து கொடுமை படுத்திய முன்னாள் NHS மருத்துவருக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வடகிழக்கு லிங்கன்ஷையரின் கிரிம்ஸ்பையிலுள்ள டயானா பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிந்தவர் மருத்துவர் ஹொஸாம் மெட்வாலி (Hossam Metwally), 61 வயது.
அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக, தனது காதலி 33 வயது காதலியை, தீய ஆவிகளிடமிருந்து விடுவிப்பதாக கூறி, இஸ்லாமிய மத சடங்குகளை செய்வதற்காக, தொடர்ந்து வலி நிவாரணிகள் மற்றும் மயக்க மருந்துகளை செலுத்தி சித்திரவதை செய்துள்ளார்.
Picture: PA
அதற்காக கெட்டமைன் மற்றும் ஃபெண்டானைல் போன்ற சக்திவாய்ந்த மருந்து பொருட்கள் தனது வீட்டிலேயே பயன்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, தற்போது அப்பெண்ணின் உடலில் பல முக்கிய உறுப்புகள் செயலிழந்து, கிட்டத்தட்ட உயிர் மட்டுமே உள்ள ஒரு மனித பொம்மைபோல் கடுமையாக பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.
கெல்லி வில்சன் (Kelly Wilson) எனும் 33 வயதாகும் அப்பெண் செவிலிய மாணவியாக 2013-ஆம் ஆண்டு, ஹொஸாம் மெட்வாலி பணியாற்றிய அதே மருத்துவமனையில் சேர்ந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஜூனியரான அப்பெண்ணை, நான்கு ஆண்டுகளாக ஆபத்தான பரிசோதனைகளை நடத்தி கொடுமை படுத்தியது மட்டுமல்லாமல், சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் படம்பிடித்துள்ளார்.
Picture: PA
கடந்த 2019-ஆம் ஆண்டு ஹொஸாம் மெட்வாலி பொலிஸில் சிக்கினார். இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்து, அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு Sheffield Crown நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஹொஸாம் மெட்வாலிக்கு 14 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இடையில், மேலும் 2 பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்த 2 பெண்களையும் அவர்களுக்கே தெரியாமல் மருத்துவர் ஹொஸாம் மெட்வாலி ஆடைகள் இன்றி ஆபாசமாக படம்பிடித்துள்ளார். இந்த குற்றமும் நிரூபிக்கப்பட்டு, அதற்கும் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டது.