பிரித்தானியாவின் நிலை குறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாக கூறிய முக்கிய தகவல்
கொரோனா வாட்டி வதைக்கும் நிலையில் பிரித்தானியாவின் நிலை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் முக்கிய தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்த வருகின்ற போதிலும், நாடு இன்னும் கொரோனா பிடியிலிருந்து மீளவில்லை என பிரதமர் நம்புவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தொற்றுகள் குறையும் போது இது நம்பிக்கை அளிப்பதாக நாங்கள் எப்போதும் கூறியுள்ளோம்.
தொற்று குறைவது ஊக்கமளிக்கிறது, ஆனால் கொரோனா முடிந்துவிடவில்லை.
உட்புறங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளிக்கும் பிரத்தானியாவின் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு நகர்வது, தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் அதன் தாக்கத்தை பிரித்தானியா இதுவரை காணவில்லை.
பிரித்தானியாவில் இன்னும் தொற்றுகள் அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.