சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய பெண் மீது உருண்டு விழுந்த பாறைகள்... ஒரு துயர சம்பவம்
சுவிட்சர்லாந்தில் தன் நண்பருடன் வாக்கிங் சென்ற பிரித்தானிய பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக ஒரு கோர முடிவை சந்திக்க நேர்ந்தது.
நேற்று முன் தினம் மாலை, Valais மாகாணத்திலுள்ள Verbier என்ற கிராமத்தில், 43 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவர் தன் நண்பருடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, திடீரென பாறைகள் உருண்டு வந்துள்ளன. அவை அந்த பெண் தலையில் வந்து விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மீட்புக் குழுவினர் அவரது இறப்பை உறுதி செய்த நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவரது பெயர் மற்றும் அவர் பிரித்தானியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.