பிரித்தானியாவில் கடவுச்சீட்டுக்காக காத்திருப்பு காலம் அதிரடியாக குறைப்பு: புதிய தகவல்
பிரித்தானியர்கள் புதிய கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்தவர்கள் இனி பல வாரங்கள் காத்திருக்கும் நிலை இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றே வாரத்தில்
புதிய கடவுச்சீட்டுகளுக்கான காத்திருப்பு நேரம் பல ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்குக் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் 10 வாரங்கள் வரையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இதற்கு பல காரணங்களும் கூறப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து வருவதும், ஆவணங்கள் சரிபார்த்து அதை பத்திரப்படுத்தும் நடவடிக்கையும் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றே வாரத்தில் இனி கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு தயாராகும் பலருக்கும் இது நிம்மதி அளிக்கும் தகவலாகவே இருக்கும். 2020க்கு பின்னர் காத்திருப்பு காலம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது தற்போது தான் என்றும் கூறியுள்ளனர்.
புதிய கடவுச்சீட்டு என்றால்
இதில் பெரியவர்கள் மற்றும் சிறார்களின் கடவுச்சீட்டு புதுப்பித்தல் என்றால் 10 நாட்களுக்குள் விநியோகிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு வாரங்கள் வரையில் தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், பெரியவர் ஒருவருக்கு புதிய கடவுச்சீட்டு என்றால் சராசரியாக 12 நாட்கள் காத்திருப்பு காலம் என்றும், சிறார்களுக்கு 11 நாட்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பித்தல் என்றால் சிறார்களுக்கு 10 நாட்கள் என்றும், பெரியவர்கள் என்றால் 9 நாட்கள் சராசரியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |