ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல்
UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
One in, one out திட்டம்
பிரான்சும் பிரித்தானியாவும் செய்துகொண்டுள்ள One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்
இந்நிலையில், அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், இதுவரை சுமார் 1,400 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
ஆக, மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செலவிடப்படும் நிலையில், அத்திட்டத்தால் உண்மையாகவே பலன் உள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், ஒரு புகலிடக்கோரிக்கையாளரை பிரித்தானியாவில் ஓராண்டுக்கு ஹொட்டல் ஒன்றில் தங்கவைப்பதற்கு ஆகும் செலவை விட இது குறைவுதான் என தனது வாதத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷபானா.