பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை
பிரித்தானிய அரசு, நாட்டை போர் சூழ்நிலைக்கு தயார்படுத்தும் புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது.
பிரித்தானிய அரசு, நாடு முழுவதிலும், அதாவது இராணுவம், காவல்துறை, மருத்துவமனைகள், தொழில் துறை ஆகிய அனைத்தையும் போர் சூழ்நிலைக்கு தயார்படுத்தும் புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது.
இதை பிரித்தானிய ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி, ஏர் சீஃப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன், Sky News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “இது பழைய ‘Government War Book’ திட்டத்தின் புதிய வடிவம். பனிப்போர் காலத்தில் இருந்த அனுபவங்களை, இன்றைய சமுதாயம் மற்றும் கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். மக்கள் தங்களது வாழ்க்கை முறையையும், நாட்டின் பாதுகாப்பையும் வேறுபட்ட பார்வையில் பார்க்க வேண்டும்.” எனள் கூறியுள்ளார்.

இந்த திட்டம், மின்சாரம், நீர், போக்குவரத்து போன்ற முக்கிய தேசிய அடிப்படை வசதிகள், இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமல்லாமல், எதிரிகளின் தாக்குதல்களுக்கும் எதிராக வலுவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மேலும், ரஷ்யாவின் “shadow fleet” எனப்படும் தடைசெய்யப்பட்ட கப்பல்களை கைப்பற்றும் எச்சரிக்கை ஏற்கனவே விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், பிரித்தானிய கடற்படை, விமானப்படை, இராணுவம் அனைத்தும் மீண்டும் போர்க்கால (war footing) நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு, பாதுகாப்பு செலவுகளை 2035-க்குள் GDP-இன் 3.5 சதவீதமாக உயர்த்தும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், ஆயுதங்கள் மற்றும் திறன்களைப் பெறுவதற்கான 10 ஆண்டு முதலீட்டு திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சர் நைட்டன், “கடந்த 30 ஆண்டுகளில் நாம் அனுபவித்த அமைதி, இப்போது சவாலுக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |