நஞ்சால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக தடைகள் அதிகரிக்கவுள்ள பிரித்தானியா
நவால்னி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக வெளியான அறிக்கைக்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை அதிகரிக்க பிரித்தானியா பரிசீலித்து வருகிறது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024 பிப்ரவரியில் ஆர்க்டிக் சிறையில் மர்மமாக உயிரிழந்தார்.
சமீபத்திய அறிவியல் ஆய்வுகள், ஈட்டி தவளைகளில் (Dart Frog) காணப்படும் “எபிபாட்டிடின்” (Epibatidine) என்ற கொடிய நஞ்சால் நவால்னி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்துகின்றன.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவே இந்த நஞ்சை பயன்படுத்தியது. நவால்னி அரசியல் எதிர்ப்பாளராக இருந்ததால் அவரை அழிக்க ரஷ்யாவுக்கு காரணமும் வாய்ப்பும் இருந்தது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், “நவால்னியின் மரணம் இயற்கை காரணங்களால் அல்ல. ரஷ்ய அரசு உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி அவரை கொன்றது. இது Chemical Weapons Convention உடன்பாட்டை மீறுகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும், “ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிப்பதை பிரித்தானியா பரிசீலித்து வருகிறது. NATO கூட்டாளிகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “நவால்னி, அடக்குமுறைக்கு எதிராக தைரியமாக போராடியவர். புதின் அரசின் கொடூர நோக்கம் அவரது மரணத்தில் வெளிப்படுகிறது” என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் கணவர் புதின் ஆணையால் கொல்லப்பட்டார் என்று சொன்னேன். இன்று அது அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
ரஷ்ய அரசு, “நவால்னி சிறையில் நடைப்பயிற்சிக்குப் பிறகு திடீரென உடல்நலக்குறைவால் இறந்தார்” என்ற விளக்கமே அளித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகள், “இது திட்டமிட்ட அரசியல் கொலை” என உறுதியாகக் கூறுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK sanctions Russia Navalny, Navalny poisoned epibatidine toxin, Dart frog toxin, #Navalny #RussiaSanctions #UKPolitics #EpibatidinePoisoning #DartFrogToxin #HumanRights