பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சொந்த கட்சி!
பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக சொந்த கட்சியில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.
உள்ளூர் நேரப்படி, இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை (1700-1900 GMT) வாக்குப்பதிவு நடைபெறும் என்று, 2020 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் 1922 கமிட்டியின் தலைவராக இருக்கும் கிரஹாம் பிராடி கூறினார்.
2019-ல் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், COVID-19 பெருந்தோற்றச் சமாளிக்க பிரித்தானியா முழுவதும் கடுமையான ஊரடங்கு விதிகளின் கீழ் இருந்தபோது, பிரதமர் அலுவலகத்திற்குள் பல முறை மதுபான விருந்து நடத்தியது தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து பெரும் சிக்கலில் சிக்கினார். இப்போது இன்னும் அந்த அழுத்தத்தில் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை.
2019 மற்றும் 2021-க்கு இடையில் நிதியமைச்சகத்தில் ஜூனியர் அமைச்சராக பணியாற்றிய ஜெஸ்ஸி நார்மன், பிரதமர் ஜான்சன் ஆட்சியில் இருந்து வாக்காளர்களையும் கட்சியையும் அவமதித்துவிட்டார் என்று கடுமையாக தாக்கியுள்ளார்.
57 வயதான பிரதமர், நாட்டின் மந்தநிலை, விலைவாசி உயர்வு மற்றும் தலைநகர் லண்டனில் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பயணக் குழப்பத்தின் அபாயத்தை எதிர்கொண்டுவரம் நிலையில், பிரித்தானியாவை ஆளும் அதிகாரத்தை இழந்துவிட்டாரா என்று பல கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் கவலை தெரிவித்த்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சொந்த கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவுள்ளனர்.