டிஜிட்டல் அடையாள திட்டத்தை ரத்து செய்யவுள்ள பிரித்தானியாவின் அடுத்த பிரதமர்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள லேபர் கட்சித் தலைவர் ஆன்டி பர்னாம், அரசின் டிஜிட்டல் அடையாள (Digital ID) திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஊழியருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கி, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பால், திட்டம் "பெரும் தோல்வி" எனக் குறிக்கப்பட்டது.
பர்னாம், "இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட இருந்த நேரமும் பணமும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் கணக்காய்வு அமைப்பு (OBR) இந்தத் திட்டத்தின் செலவு 2026 முதல் 2029 வரை 1.8 பில்லியன் பவுண்டு (சுமார் $2.4 பில்லியன்) ஆகும் என மதிப்பிட்டது. இதனால், வரி செலுத்தும் மக்களின் பணம் வீணாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. ஜூலியா லோபெஸ், "லேபர் கட்சி ஏற்கனவே கோடிக்கணக்கான பவுண்டுகளை வீணாக்கியுள்ளது. இப்போது பர்னாம் தன்னை மீட்பவராக காட்ட முயற்சிக்கிறார்" என விமர்சித்துள்ளார்.
பிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தேசிய அடையாள அட்டைகள் நீக்கப்பட்டன. மக்கள் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அடையாளத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |