அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதிகளிடம் அடுத்தடுத்து பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினார்.
ரிஷி சுனக் இந்த ஆண்டு பிரித்தானியாவின் மூன்றாவது பிரதம மந்திரி ஆவார்.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றவுடன், ரிஷி சுனக் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தலைவர்கள் "இருதரப்பு மற்றும் இந்தோ-பசிபிக் போன்ற பிராந்தியங்களில்" தங்கள் கூட்டாண்மையின் அளவைப் பற்றி விவாதித்ததாக சுனக்கின் அலுவலகம் கூறியது.
இரு தலைவர்களும் வடக்கு அயர்லாந்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து விவாதித்ததாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
பைடனுடன் பேசுவதற்கு முன், சுனக் முதலில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு போன் செய்து, உக்ரேனிய மக்களுக்கு பிரித்தானியாவின் ஆதரவை வெளிப்படுத்தினார்.
செவ்வாயன்று எண் 10-க்கு வெளியே உள்ள செய்தியாளர்களிடம் பேசிய சுனக், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி குறிப்பிட்டார். அப்போது "உக்ரேனில் புட்டினின் போர் உலகம் முழுவதும் ஆற்றல் சந்தைகளையும் விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு அவரது தலைமையின் கீழ் எப்போதும் போல் வலுவாக இருக்கும் என்று ரிஷி கூறினார்.
தொடர்ந்து பொருளாதார தடைகள் மூலம் புட்டினின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் உரையாடியதாக கூறப்படுகிறது.