பிரித்தானியாவில் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் தலைமறைவு! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவில் பொறுப்பின்றி காரை ஒட்டிச்சென்று விபத்துக்கு உள்ளாக்கி, 2 குழந்தைகள் கொடூரமாக மரணிக்க காரணமாக இருந்த தாய் தலைமறைவாகியுள்ளார். அவரது புகைப்படத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் டெர்பி சேர்ந்தவர் மேரி மெக்கன் (Mary McCann). 35 வயதாகும் இவர் 4 குழந்தைகளுக்கு தாயாவார்.
இவர் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் திகதி இங்கிலாந்தின் M1 சாலையில், தனது 10 வயது மகன் ஸ்மாலர் (Smaller) மற்றும் 4 வயது மகள் லில்லியுடன் (Lilly), தனது Vauxhall Astra காரை படுவேகமாக, தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக Scania எனும் கனரக ராக்கு லொறி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் லொறியில் வந்த டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்கப்படவில்லை, மற்றும் காரை ஒட்டிய மேரியும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், அதில் இருந்த 2 குழந்திகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொறுப்பின்றி காரை ஒட்டிச்சென்று விபத்துக்கு உள்ளாக்கி, 2 குழந்தைகள் கொடூரமாக மரணிக்க காரணமாக இருந்த மேரி மெக்கன் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் ஒரு மாத பெயிலில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) Aylesbury Crown நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், மேரி மெக்கன் நிதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.
அவர் பெயிலில் கொடுக்கப்பட்ட முகவரியில் சென்று பார்த்தபோது, அங்கும் அவரை காணவில்லை. மேலும், அது அவரது சகோதரியின் விட்டு முகவரி என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று Thames Valley பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.