பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்டார்மர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகிய கீர் ஸ்டார்மர்
பிரித்தானிய அரசியலில் புதிய திருப்பமாக, தனது சொந்த லேபர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக லேபர் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல்கள் அதிகரித்தது மற்றும் அரசின் மீதான மக்களின் ஆதரவு சரிந்து வருவது போன்ற காரணங்களினால் கீர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுனிங் தெருவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஸ்டார்மர், தன்னுடைய லேபர் கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக பிரதமராக நீடிப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதையும், தனக்கு பின்னால் வரும் புதிய தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதையும் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லேபர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்ததுடன், பிரித்தானிய பிரதமராக ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |