'நல்லவேளை பிரிந்துவிட்டோம்' இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி பரபரப்பு தகவல்
இளவரசர் ஹரியுடனான தனது உறவு நீண்ட காலம் நீடிக்காதது தனது 'அதிர்ஷ்டம்' என அவரது முன்னாள் காதலி கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல மொடலான புளோரன்ஸ் செயின்ட் ஜார்ஜ் (Florence St George), 35, இளவரசர் ஹரியுடனான தனது உறவு குறுகிய காலமே நீடித்தது என்றும், விளம்பரத்தை சமாளிக்க போராடியதால், "அதிர்ஷ்டம்" என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
இளவரசர் ஹரியுடன் 2011-ல் டேட்டிங் செய்ததாக தி டெலிகிராப் ஸ்டெல்லா பத்திரிகையில் நினைவு கூர்ந்த புளோரன்ஸ், தங்கள் உறவு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களால் அதிகமாக ஆராயப்பட்டது என்றும், அதனால் தனது தனியுரிமை மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
"ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கதை பத்திரிகைகளில் தோன்றும், எனது பள்ளி நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர், மேலும் எனது வாசலுக்கு வெளியே புகைப்படக் கலைஞர்கள் எப்போது இருந்தனர்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
Image: CBS/Getty
அவர்கள் இருவரும் ஏன் பிரிந்தனர் என்பதை புளோரன்ஸ் கூறவில்லை.
இப்போது இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் அவர், அறையை காலத்தில் பயத்திலும் கவலையிலும் இருந்ததாக கூறினார்.
இறுதியில் தனது குடும்பத்தினரின் ஊக்கத்துடனும், மருத்துவரின் உதவியுடனும் அதிலிருந்து மீண்டதாக அவர் கூறினார்.
பின்னர் அவர் மல்டி மில்லியனர் ஹென்றி செயின்ட் ஜார்ஜை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் தனது பெயர் இளவரசர் ஹரியின் பெயருடன் அடிபடும் என அறிந்ததாக அவர் கூறினார்.
பிறகு 2019 காலகட்டத்தில் ஒருவழியாக ஹரியின் முன்னாள் காதலி 'Harry's Ex' என கருதப்படாமல் நிம்மதி அடைந்ததாக கூறினார்.