முதல் குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய இளவரசி! பெருமகிழ்ச்சியில் ராஜ குடும்பம்! குவியும் வாழ்த்துக்கள்..
ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், பிரித்தானிய இளவரசியுமான பீட்ரைஸ் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் (Princess Beatrice) மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி (Edoardo Mapelli Mozzi) இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2.7 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஆரோக்கியமாக பிறந்துள்ள இந்த குழந்தை, லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு 11.42 மணியளவில் பிறந்துள்ளது.
Her Royal Highness Princess Beatrice and Mr Edoardo Mapelli Mozzi are delighted to announce the safe arrival of their daughter on Saturday 18th September 2021, at 23.42, at the Chelsea and Westminster Hospital, London.
— The Royal Family (@RoyalFamily) September 20, 2021
Read the announcement in full - https://t.co/ImbfRLEdAe pic.twitter.com/olwDMv3Zmo
பீட்ரைஸின் மகள், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளு பேத்தியாவர் மற்றும் அவரது தாயின் பின்னால் சிம்மாசனத்தில் 11-வது இடத்தில் உள்ளார்.
குழந்தையின் பெயர் இன்னும் வெளியிடப்படபடவில்லை. அனால், பக்கிங்ஹாம் அரண்மனை, இளவரசியும் அவரது மகளும் நலமாக இருப்பதாகவும், குழந்தையின் தாத்தா பாட்டி மற்றும் கொள்ளுத்தாத்தா-பாட்டி "மகிழ்ச்சி அடைவதாக" தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
குழந்தையின் தாய் ஒரு இளவரசி என்றாலும், அவருக்கு அரச பட்டம் இருக்காது. ஆண் வரிசையில் மன்னரின் பேரக்குழந்தைகளுக்கு மட்டுமே தானாகவே HRH-இன் ஸ்டைலிங் உரிமை உண்டு.
இதன் பொருள் அவர் சாதாரண மிஸ் மாபெல்லி மோஸியாக இருப்பாள்.
ராணி விரும்பினால் தனது பேரக்குழந்தைக்கு ஒரு பட்டத்தை வழங்க முடியும், ஆனால் அது கேட்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.