பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு துவங்கியது சிக்கல்... கைவிட்ட தொண்டு நிறுவனம்
கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து, 100,000 பவுண்டுகள் வாங்கிக்கொள்ளுமாறு இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை அவர்களுடைய தந்தையாகிய இளவரசர் ஆண்ட்ரூ வற்புறுத்திய விடயம் புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்கியுள்ளது.
சிக்கலில் பிரித்தானிய இளவரசிகள்...
இளவரசர் ஆண்ட்ரூ, 2001 முதல் 2011 வரை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதியாக இருந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில், கோடீஸ்வரரான டேவிட் ரோலண்ட் என்பவரின் மகனான ஜோனத்தன் ரோலண்ட் என்பவரிடம் 100,000 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளுமாறு தன் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை ஆண்ட்ரூ வற்புறுத்தியது குறித்த மின்னஞ்சல் ஒன்று தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாகியுள்ளது.
கைவிட்ட தொண்டு நிறுவனம்
ஏற்கனவே இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் தாயான சாரா ஃபெர்குசன், ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால், அவருடனான தொடர்புகளை அவர் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன.

அதேபோல, தற்போது இளவரசி யூஜீனி அறங்காவலராக இருந்த Anti-Slavery International என்னும் உலகின் பழமையான மனித உரிமைகள் அமைப்பு, யூஜீனியின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதால், யூஜீனியுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
ஆக, எதிர்பார்த்ததுபோலவே, ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கும் பிரச்சினை துவங்கிவிட்டது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |