பிரித்தானிய மகாராணியின் உடல்நிலையில் சரிவு: ட்விட்டரில் வருத்தம் தெரிவித்த பிரதமர் லிஸ் ட்ரஸ்!
பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை.
மகாராணி தொடர்ந்து மருத்துவ மேற்பார்வையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்கள் கவலைத் தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் ராணி இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
Sky News
இது தொடர்பாக இன்று காலை வெளியான அறிக்கையில் ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், அத்துடன் ராணியை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதற்கு பரிந்துரைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மருத்துவர்களுடைய அறிவுறுத்தலின் பெயரிலேயே நேற்று நடைபெற்ற தனியுரிமை கவுன்சில் கூட்டத்தை அவரது மாட்சிமை ஒத்திவைத்தது எனவும் தெரிவித்துள்ளது.
Sky News
மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செவ்வாயன்று பிரித்தானியாவில் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சனை சந்தித்ததுடன் மட்டுமில்லாமல், பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பே லிஸ் டிரஸ்ஸை வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியத்தை முறித்து பால்மோரலில் சந்தித்தார்.
இந்நிலையில் ராணியின் உடல் நிலை தொடர்பாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ள தகவலில், பிற்பகலில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளிவந்துள்ள செய்தியால் முழு நாடும் ராணி உடல்நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலையில் உள்ளனர் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
The whole country will be deeply concerned by the news from Buckingham Palace this lunchtime.
— Liz Truss (@trussliz) September 8, 2022
My thoughts - and the thoughts of people across our United Kingdom - are with Her Majesty The Queen and her family at this time.
அத்துடன் தன்னுடைய மற்றும் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களின் எண்ணங்களும் தற்போது பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: கேள்வி கேட்ட ஆசிரியர்...மாரடைப்பில் உயிரிழந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி: ஆந்திராவில் பரபரப்பு!
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ராணியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க ஆற்றல் விவாதத்தில் ஈடுபட்டு வந்த எம்.பி.களை சர் லிண்ட்சே ஹோய்ல் இடைமறிக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.