உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்... அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரித்தானியா மகாராணி அனுப்பிய செய்தி!
உலகையே உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்கலின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அமெரிக்க ஜனாதிபதிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
2001ஆம் ஆண்டு இதே நாளில்தான்(செபடம்பர் 11) அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டன.
இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலைியல், இரட்டை கோபுர தாக்குதல்கலின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அமெரிக்க ஜனாதிபதிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
11 செப்டம்பர் 2001 அன்று நடந்த கொடூர தாக்குதலின் 20 வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் இந்நாளில், அத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிபிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அத்துடன் அன்று பணிக்கு அழைக்கப்பட்ட முன் கள பணியாளர்கள் மற்றும் மீட்பு குழுவினர் அனைவரும் என்னுடைய, எனது குடும்பத்தினருடைய மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நினைவிலும் பிரார்த்தனையிலும் இருக்கிறார்கள்.
2010ல் உலக வர்த்தக மையத்தின் தளத்திற்கு நான் விஜயம் செய்தது உடனடியாக என் நினைவுக்கு திரும்பியது.
The Queen’s message to the President of the United States on the 20th anniversary of the attacks on 11th September 2001. pic.twitter.com/jsdH4X50Ao
— The Royal Family (@RoyalFamily) September 11, 2021
பல நாடுகள், நம்பிக்கைகள் மற்றும் பின்னணியை கொண்ட உயிரிழந்தவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தியது மற்றும் இத்துயரத்திலிருந்து மீண்டெழ ஒன்றிணைந்து அயராது படுப்பட்ட மக்களின் வெற்றிக்கும் உறுதிப்பாட்டிற்கும் மரியாதை செலுத்தியதை அது எனக்கு நினைவூட்டுகிறது என பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.