பிரித்தானியாவில் தளர்த்தப்பட்ட சில மணிநேரங்களில் அவதிக்கு உள்ளான மக்கள்! அரசு உடனடி பதில்
பிரித்தானியாவில் கோவிட் விதிமுறைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்ட முதல் நாளான இன்று, இலவச கோவிட் சோதனை கருவி கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர்.
அரசாங்க வலைதளத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக இன்று இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கான கோவிட் சோதனை கருவியை (Rapid lateral flow test kit) ஆர்டர் செய்யமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரசாங்க போரட்டல் மூலமாக மக்கள் இன்று 'at-home kits' என்று சொல்லக்கூடிய இலவச சோதனை கருவிகளை ஆர்டர் செய்ய முயற்சிக்கும்போது, அதில் "இதற்கு மேல் இன்று ஓன்லைன் மூலமாகவோ அல்லது கால் சென்டர் மூலமாகவோ சோதனைக் கருவிகளை ஓர்டர் செய்ய முடியாது.
தயவுசெய்து நாளை கூடுதலாக சோதனை கருவிகள் கிடைக்கும் நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்" என்று காண்பித்துள்ளது.
இருப்பினும், அரசாங்க தளத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு தவறாமல் பதிலளிக்கப்பட்டது.
இது குறித்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "gov.uk வலைத்தளம் வழியாக ஓர்டர் செய்ய சோதனை கருவிகள்இ ன்னும் கிடைக்கின்றன என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
இன்று வலைத்தளத்துல் தற்காலிக தொழில்நுட்ப தடுமாற்றம் ஏற்பட்டது, இது இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.