ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் சீன நிறுவனங்களுக்கு பிரித்தானியா புதிய தடைகள்
பிரித்தானியா ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆதரவளிக்கும் சீனாவைச் சேர்ந்த 10 நிறுவனங்களுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இது 2022-ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா தொடர்பில் அமுல்படுத்திய மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும்.
இந்த தடைகள் தாய்லாந்து மற்றும் இந்தியாவிலுள்ள சில நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், இரட்டை பயன்பாட்டுள்ள உற்பத்திகள் ஆகியவற்றை ரஷ்ய இராணுவத்திற்கு வழங்கும் நிறுவனங்களே முக்கிய இலக்காக உள்ளன. இதில் போர் ஆயுத அமைப்புகளில் பயன்படும் Microprocessor-களும் அடங்கும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான போர் நான்காம் ஆண்டில் அடியெடுத்துள்ள நிலையில், பிரித்தானிய அரசு உக்ரைனை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக திங்கட்கிழமையன்று, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் நோ க்வாங் சோல், 11,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய பிற அதிகாரிகள் மற்றும் கிர்கிஸ்தானில் உள்ள OJSC Keremet வங்கி ஆகியவற்றுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் சந்தித்து உக்ரைனின் ஒப்புதல் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்த உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |