இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தாலும் இங்கே செல்லாது! பிரபல நாடு வெளியிட்ட அதிரடி தகவல்
இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருத்துவப்படுவர் என்று இங்கிலாந்து அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை வருடங்களாக வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடும் பேராயுதமாய் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
ஒரு சில நாடுகளுக்கு செல்ல முழுமையாக இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது.
தற்போது இங்கிலாந்து செல்லகூடிய இந்திய பயணிகள் தடுப்பூசி 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சுல்தான், தாய்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் வருகின்ற அக்டோபர் 4ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.