பாதிக்கப்பட்ட 6 பெண்கள்... மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மீது பாய்ந்த வழக்கு
பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் 6 பெண் ஊழியர்களை துஸ்பிரயோகம் செய்த விவகாரத்தில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் கைது
தொடர்புடைய விவகாரத்தில் 54 வயதான அமல் போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், 2017 மற்றும் 2022 க்கு இடையில் 14 வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு எதிரான குற்றங்களைப் புகாரளித்த நிலையில் தொடர்புடைய மருத்துவமனை 2023 இல் லங்காஷயர் காவல்துறையைத் தொடர்பு கொண்டது.
கடந்த ஆண்டு மார்ச் 14ம் திகதி பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனை தொடர்புடைய விவகாரத்தில் தங்களை தொடர்பு கொண்டதாக லங்காஷயர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைக்க தயார்
மேலும், விசாரணையைத் தொடர்ந்து, முறைப்படி தற்போது ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. துர்ன்ஹாம் பகுதியை சேர்ந்த அமல் போஸ் ஜூன் 7ம் திகதி லான்காஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்.
மேலும், அமல் போஸ் முன்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சைத் துறையின் தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் தாங்கள் முழுமையாக ஒத்துழைக்க தயார் என பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |