கொரோனா 3வது அலை... பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
3வது கொரோனா வைரஸ் அலை சாத்தியம் குறித்து பிரித்தானியா விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Wrexham நகரில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து செயல்படுவதால், நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
எவ்வாறாயினும், நாம் அதை முழுமையாக அழித்துவிட்டோம் என்று அர்த்தமல்ல.
3வது அலை குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக கொரோனாவின் மற்றொரு அலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் தடுப்பூசி திட்டம் இப்போது மிகப் பெரியளவில் உள்ளது என்று நான் நினைக்கிறேன், சுமார் 33.6 மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அடுத்த அலைக்கு எதிரான சில வலுவான தடுப்புகளை நாம் கட்டமைத்துள்ளோம், விரைவில் அவை எவ்வளவு வலிமையானவை என்பதை நாம் காணலாம் என போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஞ்ஞானிகள் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்கள், இருப்பினும் பிரதமரைப் போலவே தடுப்பூசிகள் அதனை தடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.