பிரித்தானியாவில் 6 மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் விடுமுறையில் சென்ற பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குடும்பத்துடன் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், அவர் திரும்பி வருவதற்குள் இருக்கிற ஆறு முக்கிய பிரச்சினைகளும் நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் போரிஸ் ஜான்சன், மான்செஸ்டரில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு வெள்ளிக்கிழமை தனது மனைவி கேரி மற்றும் அவர்களின் மகன் வில்ஃப் உடன் மார்பெல்லாவுக்கு (Marbella) பயணம் மேற்கொண்டார்.
வரும் வியாழக்கிழமை வரை அவர் கோஸ்டா டெல் சோலில் உள்ள ஒரு சொகுசு வில்லாவில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனால், அவர் இவ்வாறு ஓய்வெடுக்க சென்றுள்ள இந்த நேரத்தில் பிரித்தானியாவை மிகப்பெரிய தாக்கத்திற்கு உட்படுத்தும் ஆறு மிகமுக்கிய பெரிய பிரச்சினைகள் உள்ளன.
Image: Getty Images
இதனால், அவர் மீது விமர்சங்கள் எழுந்துள்ளன. அதே சமயம், அவருடைய இந்த ஓய்வுக்கு ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் தற்போது நிலவிவரும் 6 மிக முக்கிய சிக்கல்கள் என்ன?
1- எரிபொருள் விலையேற்றம் மற்றும் சப்ளையர்கள் சரிவு
கடந்த 12 மாதங்களில் எரிவாயு விலை 1000% உயர்ந்துள்ளது. தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகைக்கவுள்ளன. அதே சமயம், எரிபொருள் சப்ளையர்கள் அபாயத்தில் உள்ளனர், பல எரிசக்தி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2- எரிபொருள் தட்டுப்பாபாடு
பிரித்தானியாவில் வரும் குளிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொடும் அபாயம் எழுந்துள்ளது. எரிவாயு விநியோகத்தில் எந்த தடங்கல்களும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியவில்லை என வணிக செயலாளர் Kwasi Kwarteng கூறியுள்ளார்.
3- தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்
எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்துவதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை என்று தொழில்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
4- மாதாந்திர உதவித்தொகை ரத்து
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை (Universal Credit cuts) வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5- உணவு வலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்
உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடைகளில் அலமாரிகள் அனைத்தும் காலியாக காணப்படுகினறன. பிரித்தானியாவில் உள்ள பெரியவர்களில் ஆறு பேரில் ஒருவர் கடந்த பதினைந்து நாட்களில் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியவில்லை என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
6- எரிபொருள் டேங்கர்களை இயக்க இராணுவம் வரைவு செய்யப்பட்டது
ட்ரக் டிரைவர்கள் பற்றாக்குறையால் பம்புகளுக்கு பெட்ரோலை கொண்டுசேர்க்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சமீபத்திய வாரங்களில் எரிபொருள் பெற சிரமப்பட்டனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களை நிரப்ப இராணுவ டேங்கர் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.