பெண்களுக்கு Scholarship-உடன் பிரித்தானியாவில் உயர்கல்வி வாய்ப்பு- பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பு
வெளிநாட்டு பெண்கள் பிரித்தானியாவில் STEM (Science, Technology, Engineering, Mathematics) துறைகளில் உயர் கல்வி பெறுவதற்கான முழுமையாக நிதியுதவி செய்யப்பட்ட scholarship-க்கு விண்ணப்பிக்க பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த scholarship, பெண்களுக்கு பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த scholarship மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகள், முழு கல்விக் கட்டணம், வாழ்வாதார செலவுகள், பயணச் செலவுகள் ஆகிய அனைத்தையும் இலவசமாக பெறுவார்கள்.
மேலும், பிரித்தானியாவில் கல்வி பெறும் போது தேவையான ஆதரவு மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்த scholarship-ன் முக்கிய நோக்கம், பெண்களை STEM துறைகளில் அதிகமாக ஈர்க்கவும், அவர்களின் திறமைகளை உலகளவில் வெளிப்படுத்தவும் உதவுவதாகும்.
குறிப்பாக, கணினி அறிவியல், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், தரவு அறிவியல், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பெண்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
“இந்த scholarship, பெண்களுக்கு உலகளாவிய கல்வி அனுபவம் அளிப்பதோடு, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்யும்” என பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விவரங்களைப் பெறலாம். விண்ணப்பங்கள் 2026 மார்ச் மாதம் வரை ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த scholarship மூலம் பல இந்திய பெண்கள் பிரித்தானியாவில் உயர் கல்வி பெற்று, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |