பிரித்தானியா கல்லூரிக்குள் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியுடன் தனியாளாக மோதி மடக்கி பிடித்த ஹீரோ ஆசிரியர்! கமெராவில் சிக்கிய காட்சி
பிரித்தானியா கல்லூரியில் தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியுடன் தனியாளாக மோதிய ஆசிரியர், அவனை தரையில் சாய்த்து மடக்கி பிடித்து காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 26ம் திகதி மதியம் 3 மணிக்கு சசெக்ஸில் உள்ள கிராலி கல்லூரி மைதானத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நுழைந்த இளைஞர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கிய இளைஞர், மைதானத்திலிருந்த மாணவர்களை ஓடுங்கள் ஓடுங்கள் எனக் கூச்சலிட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தாக்குதல் நடத்திய இளைஞனுடன் தனியாளாக மோதிய ஆசிரியர் ஒருவர், அவனை தரையில் தள்ளி மடக்கி பிடித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட 18 வயதுடைய இனைஞனை கைது செய்து, அவனிடமிருந்த கைது துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.
இளைஞனை தைரியமாக எதிர்கொண்டு மடக்கி பிடித்த ஆசிரியரின் வீரச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
இந்த தாக்குதலில் இரண்டு கல்லூரி ஊழியர்கள் காயமடைந்துள்ளனர், எனினும் அது துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயம் இல்லை என்றும் கத்தியால் ஏற்பட்ட காயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனை பிடித்த ஆசிரியருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கைது செய்த இளைஞனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.