50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில், கெய்ர் ஸ்டார்மர் அரசு, சுமார் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி இழக்க இருக்கும் 50,000 அரசு ஊழியர்கள்
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், சேன்சலரான ரேச்சல் ரீவ்ஸும், 2030ஆம் ஆண்டுவாக்கில், 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுவருகிறார்கள்.
அதாவது, அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில், 2030 வாக்கில் 10 சதவிகித அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சேன்ஸலர் ரேச்சல் திட்டமிட்டுள்ளார்.
Hugo Philpott/UPI
அப்படி அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 2 பில்லியன் பவுண்டுகள் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது முழு நேர அரசுப் பணியாளர்களாக பணி செய்வோரின் எண்ணிக்கை 515,000 என்பது குறிப்பிடத்தக்கது.