அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது! உக்ரைனிய அழகிக்காக மனைவியை கழற்றிவிட்ட பிரித்தானியரின் புதிய உறவு முறிவு
உக்ரைனிய அகதிக்காக தனது மனைவியை விட்டுச் சென்ற பிரித்தானியர் ஒருவர், இப்போது அப்பெண்ணையும் தூக்கி எறிந்துவிட்டார்.
"என்னால் அவளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் சமீபத்தில், அகதியாக நாட்டுக்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு, மனைவியை கைவிட்டதற்காக பிரபலமாக அறியப்பட்ட இளைஞர், இப்போது தனது புது காதலியையும் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் Bradford-ஐ சேர்ந்தவர் 29 வயதான டோனி கார்னெட் (Tony Garnett), இவருக்கு 28 வயதில் லோர்னா (Lorna) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, பாதுகாவலராக வேலை செய்துவரும் டோனி கார்னெட்டும் அவரது மனைவி லோர்னாவும், ரஷ்ய படையெடுப்பின் விளைவாக போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த 22 வயதான சோபியா கர்கடிம் (Sofiia Karkadym) என்ற அழகான உக்ரைன் இளம்பெண்ணை பாவம்பார்த்து தங்களது குடும்ப வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் இந்த கதை வேறுமாதிரி சென்று முடிந்தது.
அவர் அந்த வீட்டில் தங்கிய பத்து நாட்களில் சோபியாவும் டோனியும் காதலிக்க தொடங்கினர். இது லோர்னாவிற்கு தெரியவந்ததும் இருவருக்கும் பிரச்சினையானது. இதையடுத்து, தனது மனைவி குழந்தைகளை கைவிட்டு, டோனி சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
Tony & Lorna
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் சிறு சிறு வாக்குவாதங்கள் சண்டைகள் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த புதிய ஜோடி, உக்ரைனுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழானது, இருவரும் பிரிந்துவிட்டனர்.
இருவருக்கும் இடையில் தொடர்ந்து பலமுறை சண்டை வந்துள்ள நிலையில், சோபியாவை வீட்டைவிட்டு துரத்திவிட்டதாகவும், தன்னால் அவளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் டோனி கூறியுள்ளார்.
மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்ஃபோர்டில் உள்ள டோனியின் வீட்டில் சனிக்கிழமை இரவு தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இறுதியாக சோபியாவை டோனி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
அவர்களுக்கு இடையில் அன்று இரவு ஏற்பட்ட பிரச்சினையின்போது, பொலிஸார் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய உறவை தக்கவைத்துக்கொள்ள டோனி 100 சதவீதம் போராடியதாகவும், ஆனால் சோபியா எதற்கும் ஈடுகொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.