கட்டணங்களை அரசு செலுத்துவது மாயை...அது நடக்கப் போவதில்லை: டோரி எம்.பி எச்சரிக்கை
அரசாங்கம் எரிவாயு கட்டணத்தை செலுத்தும் என்பது மாயை.
விடுபட முடியாத கடுமையான குளிர்காலமாக இருக்கும் மற்றும் மிகப்பெரிய போர் உள்ளது.
பிரித்தானியாவின் டோரி எம்.பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் வாக்காளர்களிடம், அரசாங்கம் எரிவாயு கட்டணத்தை செலுத்தும் என்பது மாயை, அது நடக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் சராசரி குடும்பத்தின் வருடாந்திர பில் £1,971 லிருந்து £3,549 ஆக உயர்த்தப்படும் என்றும் எரிசக்தி விலை வரம்பு அக்டோபருக்குள் 80% வரை உயரும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் கூடுதல் குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பிரித்தானியாவின் பிரதமர் வேட்பாளர்கள் லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரித்தானிய டோரி எம்.பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன், அரசாங்கம் எரிவாயு கட்டணத்தை செலுத்தும் என்ற மாயையில் இருக்க வேண்டாம், அது நடக்கப் போவதில்லை, மக்கள் உயர்ந்த விலைகளுடன் தான் வாழ வேண்டும் என வாக்காளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களை வறுமை மற்றும் வேலையின்மையிலிருந்து காப்பாற்றிய கோவிட் ஃபர்லோ திட்டத்தை "பேரழிவு" என்றும் சர் டெஸ்மண்ட் ஸ்வேன் குற்றம்சாட்டினார்.
Photo: Georgie Scott/Age UK
அத்துடன், உலகின் ஓவ்வொரு மாறுபாட்டிலிருந்தும் அரசாங்கம் நம்மைச் சுற்றிக் கொண்டு காப்பாற்றும் என்ற கருத்து கொரோனா காலத்தில் நமது எதிர்வினையால் கட்டமைக்கப்பட்ட மாயை என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது கடுமையான குளிர்காலமாக இருக்கும், அதிலிருந்து விடுபட முடியாது ஒரு மிகப்பெரிய போர் உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பெண்ணுடன் வாக்குவாதம்...தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்த நபர் உயிரிழப்பு!
நாம் குண்டுவீச்சுக்கு ஆளாகவில்லை என்றாலும், அந்தப் படையெடுப்பின் பெரும் பொருளாதார விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
எங்கள் பங்கு விலைவாசி உயர்வுடன் வாழ வேண்டும், உக்ரைன் குண்டுகளுடன் வாழ வேண்டும், மக்கள் தேசிய அவசரம் மற்றும் விகிதாச்சார உணர்வைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.