புல்வெளியில் வெறுங்காலுடன் நடந்த பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி
பிரித்தானியர் ஒருவர் அவுஸ்திரேலியா சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கொடிய விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது.
பிரித்தானியர்
பென் என்பவர் தனது மனைவியுடன் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள பாசர் தீவில் தங்கியிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காலணி அணியாமல் வெறுங்காலுடன் சென்றிருக்கிறார்.
அப்போது பென் கணுக்காலில் கொடிய விஷம் கொண்டு பாம்பு கொத்தியது. இதனால் கடும் வலியால் துடித்த பென் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
tiktok/geebeetv/shutterstock ken griffiths
பாம்பு கடி
பாம்பு தாக்கியபோதும், விஷம் வெளிவராதபடியான கடியால் பென் அவதிப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதாவது இது போன்ற கடியால் வலி ஏற்படும் ஆனால் விஷம் ஏறாது, ஆனால் கடித்த பகுதியை சுற்றி வீக்கம் ஏற்படும்.
பென் பாம்புக்கடிக்கு ஆளானதற்கு அவரே தான் காரணம் என பல அவுஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி வெறும் காலில் அடர்த்தியான புல்வெளியில் நடந்து சென்றது பென் செய்த தவறு, இதை அவர் தவிர்த்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.