இந்த உண்மை தெரிந்திருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கமாட்டேன்! பிரித்தானிய பயணி கூறிய விடயம் வைரல்
பிரித்தானிய பெண் பயணி ஒருவர், அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது யாரும் எச்சரிக்காத விடயம் ஒன்றை வெளிப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவில் ஈக்கள்
பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண் Faye Johnson (30). இவர் பல மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வேலை விசாவில் இருக்கிறார்.
அங்குள்ள பல இடங்களுக்கு சென்று, அது சார்ந்த அனுபவங்களை புகைப்படங்களுடன் Faye தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் தான் பார்த்த அழகிய இடங்கள் குறித்து பேசும்போது, பூச்சிகள் எவ்வளவு தீவிரமானவை என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
அவர் தற்போது எங்கு சென்றாலும் முகத்தில் வலையை அணிந்துகொண்டு, தனது அனுபவத்தை மேலும் தாங்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.
அதாவது Faye சமீபத்தில் தொலைதூர மேற்கு அவுஸ்திரேலியாவில் ஈக்களின் யதார்த்தத்தை சந்தித்தார்.
யாரும் என்னை எச்சரிக்கவில்லை
இதுகுறித்து அவர் கூறுகையில், ''பணி விசாவை எடுத்துக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லுங்கள், அங்கு பயணம் செய்வது உங்களது சிறந்த விடயமாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் கூறினர்.
சிலந்திகள், பாம்புகள், முதலைகள், சுறாக்கள், கங்காருகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். கோலாக்கள் அழகாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் யாரும் எதைப் பற்றி பேசுவதில்லை தெரியுமா? எல்லாம் ஈக்களைப் பற்றி தான். இதுகுறித்து யாரும் என்னை எச்சரிக்கவில்லை'' என்றார்.
மேலும் அவர், அழகான நிலப்பரப்பில் பாராட்டு மழை பொழிந்த போதிலும், எரிச்சலூட்டும் பூச்சிகளை திட்டிக்கொண்டே இருந்தார்.
அத்துடன், 'இந்த உண்மை குறித்து எனக்குத் தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். நான் Karijini தேசிய பூங்காவில் இருக்கிறேன். இது முற்றிலும் பிரமிக்க வைக்கிறது. அவுஸ்திரேலியாவில் நான் பார்த்த மிக அழகான இடங்களில் ஒன்று.
ஆனால், இதுதான் உண்மை. அவர்கள் (ஈக்கள்) நிறுத்த மாட்டார்கள் என்பதால் இந்த வலையை என் தலையில் அணிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.
Faye-யின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் உடனடியாக ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |