40 வயதிற்கு கீழ் இந்த தடுப்பூசி போட வேண்டாம்! பிரித்தானிய நோய்தடுப்பு குழு பரிந்துரை
பிரித்தானியாவில் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு மாற்றாக, வேறு தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனேகா கோவிட் தடுப்பூசியால் அரிய இரத்த உறைவு ஏற்படும் என்ற கவலையைத் தொடர்ந்து, அதற்கு பதிலாக மக்களுக்கு ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளை வழங்குமாறு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு (JCVI) பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பூசிக்கு மாற்றாக வேறு தடுப்பூசியை வழங்க JCVI அறிவுறுத்தியது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் அஸ்ட்ராஜெனேகாவை தவிர்த்தது வேறு கோவிட் தடுப்பூசிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் JCVI பரிந்துரைத்த நிலையில், விரைவில் அரசாங்கத்திடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒரு சிலருக்கு, இரத்த உறைவு பிரச்சினை போன்ற அரிய உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.